இதில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன் மாணவ, மாணவிகள் ஒரே மாதிரி சாண்டா கிளாஸ் உடையணிந்து பாடலுக்கேற்ப நடனமாடியது அனைவரையும் ஈர்த்ததுடன் கிறிஸ்து பிறப்பை அறிவுறுத்தும் விதமாக ஆடிய நடனமும் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த மாணவ, மாணவிகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசை மேதகு ஆயர் தனது கைகளால் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை சகோதரர் இக்னேஷியஸ் தாஸ் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியினை ஏராளமான மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டுகளித்தனர்.