சிவகங்கை: மஞ்சுவிரட்டு போட்டியில் சீறி பாய்ந்த காளைகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு வீரர்களைப் போற்றும் விதமாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் மற்றும் 117 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. சிறந்த வீரர்களுக்கும் காளைகளுக்கும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி