இந்த மாடுகள் சாலையில் செல்போர்க்கும், வியாபாரிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சிறு வியாபாரிகளின் சாலையோர கடைகளில் பழம் காய்கறிகளை கூட விட்டு வைப்பதில்லை. அதுமட்டுமின்றி, சில மாடுகள் சாலையின் நடுவே சண்டையிட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு விளைவிக்கின்றன. வாகனங்களை முட்டி தள்ளிவிடுகின்றன.
இருசக்கர வாகனங்களை மோதுவதால், இதுவரை பொதுமக்கள் காயம் அடையும் சம்பவம் நடந்து வருகிறது. இந்த நிலைமையை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் முழுமையாக சாலையில் சுற்றி தெரியும் காளைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளூர்வாசிகளின் கோரிக்கை.
உணவு தேடி சாலை அலையும் காளைகளை கோவிலுக்குச் சொந்தமான கோசாலையில் அடைத்து பராமரிக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நேற்று திருப்புவனம் பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு காளைகள் சண்டையிடும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.