ராமநாதபுரம்: போலீஸாருக்கும் எச். ராஜாவிற்கும் கடும் வாக்குவாதம்; வீடியோ

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கட்சி நிர்வாகி விழாவிற்கு செல்வதற்காக இளையான்குடி வழியாக பரமக்குடி செல்லும் போது இளையான்குடி நகர் பகுதி வழியாக எச். ராஜா வாகனம் சென்ற பொழுது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் எச். ராஜாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்த இடமே பரபரப்பானது. "எதற்காக எனக்கு தடை விதிக்கிறீர்கள்? இந்தப் பகுதியில் போகக்கூடாதா? இங்கு எதுவும் தடை உள்ளதா?

இளையான்குடி என்பது பாகிஸ்தானில் உள்ளதா?" என பல்வேறு கேள்விகளை கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் நகர் பகுதி வழியாகவே அவரை பரமக்குடிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் கூறுகையில், "எப்போதும் புறவழிச் சாலையை பயன்படுத்தி இராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்வது வழக்கம். ஆனால் நகர் பகுதிக்கு வருவதால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதி அவரிடம் எடுத்துக் கூறினோம்" என்றனர்.

தொடர்புடைய செய்தி