சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவல்துறை விசாரணையின் போது அடித்து படுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் இல்லத்திற்கு அரசியல் கட்சியைச் சேர்ந்த பல பிரமுகர்கள் வருகை தந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், தேஜகூ கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை (NCP) சேர்ந்த மாவட்ட தலைவர் பெரோஸ் காந்தி அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.