சிவகங்கை: முள் படுக்கையில் அருள்வாக்கு கூறிய பெண் சாமியார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தலில் உள்ள பூங்காவனம் முத்து மாரியம்மன் கோயில் மண்டல பூஜை கார்த்திகை 1ஆம் தேதி தொடங்கிய நிலையில் தினமும் பூங்காவனம் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோயில் நிர்வாகியும் சாமியாருமான நாகராணி காப்பு கட்டி விரதம் இருந்தார். 

மண்டல பூஜையை ஒட்டி முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் எதிரியை குவித்து வைக்கப்பட்டிருந்த ஏழடி உயர கருவேலம் இலந்தை கற்றாழை உள்ளிட்ட பலவகை தாவரங்களின் முள் படுக்கையில் சாமியார் நாகராணி படுத்து தவம் இருந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். அருள்வாக்கு கேட்க மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி