அரவிந்தன் காரைக்குடி ஜாகிர் உசேன் தெருவில் வரும்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் அரவிந்தன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி கீழே தள்ளி அரவிந்தன் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து 30 லட்சம் பணம் இருந்த அரவிந்தனின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
சம்பவ இடத்திற்கு காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் நேரில் வந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து உடனடியாக இரு தனிப்படைகள் அமைத்து தப்பிச்சென்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.