சிவகங்கை: ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி நிர்வாகம்

சிவகங்கை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் சிவகங்கை நேரு பஜார் மற்றும் தெற்கு மார்க்கெட் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் செய்து உள்ள ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரங்களை வைத்தும், நகராட்சி பணியாளர்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நகராட்சி ஆணையாளர் மேற்பார்வையில் ஏராளமான நகராட்சி பணியாளர்கள், போக்குவரத்து காவலர்கள் உட்பட ஏராளமானோர் ஆக்கிரமிப்பு பகுதிகளை குறிப்பிட்டு அவற்றை அகற்றி வருகின்றனர். காலை நேரங்களில் எப்பொழுதும் விறுவிறுப்பாக காணப்படும் நேரு பஜார் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கடைகள் முன்பு போடப்பட்டுள்ள மேற்கூரைகளை அகற்றும் பணியில் கடை உரிமையாளர்கள் ஈடுபட்டு வருவதால் வாரச்சந்தை நாளான இன்று அந்த பகுதியில் வியாபாரங்கள் பாதிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி