மாணவனுக்கு ஜாதி சான்றிதழை வழங்கிய ஆட்சியர்

சிவகங்கை பழமலை நகரில் நரிக்குறவர்கள் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஜெயபாண்டியின் மகன் தங்கப்பாண்டி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மண்டல அளவில் முதலிடம் பெற்று 438 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். அவரை ஆட்சியர் பாராட்டினார். மத்திய அரசு சமீபத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை பழங்குடியினர் பிரிவின் கீழ் அரசிதழில் வெளியிட்டது. தங்கப்பாண்டி அரசு கலைக்கல்லூரியில் சேர்க்கைக்காக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பழங்குடியினர் பிரிவில் சாதி சான்றிதழை மாற்ற விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், ஒரு வாரமாகியும் வருவாய்த்துறை அதிகாரிகள் சான்றிதழ் வழங்கவில்லை என புகார் எழுந்ததால், மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி உடனடியாக தலையிட்டு மாணவனுக்கு ஜாதி சான்றிதழை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி