சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி ஸ்ரீ பெரியநாயகி சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோவில் ஆனி உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. ஐந்தாம் திருநாளில் பெரியநாயகி சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அலங்காரமண்டபத்தில் எழுந்தருளிச் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமி யானைவாகனத்திலும் அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளிச் செய்யப்பட்டு திருவீதிப் புறப்பாடு சுற்றிவந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். ஜூலை 8ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.