கல்லல் பகுதிகளில் செப். 24 தேதி மின்தடை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (செப். 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்குடி மின் வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்லில் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கல்லல், சிறுவயல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, வெற்றியூா், மாலைக்கண்டான், சாத்த ரசனம்பட்டி, கெளரிப்பட்டி, பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டிப்பட்டி, செம்பனூா், செவரக்கோட்டை, பெரியதேவப்பட்டு, ஆலவிளாம்பட்டி, சொக்கநாதபுரம், பட்டமங்களம், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி