சிவகங்கை: பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகரில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவில். இன்று 11ம் தேதி பங்குனி உத்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் ஸ்ரீ பாலமுருகனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், திருநீர், 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. அபிஷேகங்களுக்கு பின்னர் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். பக்தர்கள் பக்தர்கள் சஷ்டி கவசம் பாடினர். திரளான பக்தர்கள் அரோகரா அரோகரா என்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி