சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (39) இவர் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது வாட்ஸ்அப் மூலம் அறிமுகமான ஒருவர் அவருக்கு லண்டனுக்கு வேலைக்குச் செல்ல உதவி செய்வதாக கூறினார். இதைத் தொடர்ந்து சரவணக்குமார் அவர் கூறியபடி இரண்டு தவணைகளில் ரூ.6,50,000 ஐ வங்கி மூலமாக அனுப்பியுள்ளார். இந்த நிலையில் அவர் லண்டனில் வேலைக்குச் செல்வதற்கான விசாவை அனுப்பியுள்ளார். அந்த விசாவை சரவணக்குமார் சோதனை செய்தபோது அது போலி விசா என்று தெரிந்தது. இது தொடர்பாக சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.