அப்போது செய்தியாளர்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டியில்: 21ஆம் தேதி காரைக்குடியில் மத்திய நிதி மற்றும் உள்துறை முன்னாள் அமைச்சர் பி. சிதம்பரம் குடும்பத்தினர்கள் கட்டி பல்கலைக்கழகத்திற்கு தருகின்ற வளர் தமிழ் நூலகத்தை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு அதே பல்கலைக்கழக வளாகத்தில் அமையப் பெற்றிருக்கின்ற அய்யன் திருவள்ளுவர் சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்து பல்கலைக்கழக வளாகத்தில் உரையாற்றுகிறார். பின்னர் இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடக்கிறது.
மறுநாள் காலை 22ஆம் தேதி சிவகங்கையில் நடைபெறக்கூடிய அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டங்களுக்கு கால்கோள் விழா, முடிவுற்ற பணிகளை திறந்து வைப்பது அனைத்தையும் முதலமைச்சர் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலைக் கல்லூரி வளாகத்தில் அவர் துவக்கி வைக்கிறார்.