தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.14) மற்றும் நாளை (நவ.15) என 2 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை 10 மணிக்கு அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறார். நாளை (15ம் தேதி) 5,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.