சிவகங்கை: லோன் மேளாக்கள் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு, குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், விரசத் (கைவினை கலைஞர்களுக்கு கடன்திட்டம்), கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு, கடன் மற்றும் வட்டி விகிதங்களில் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம/நகர்ப்புறமாயின் ரூ. 3,00,000/-க்கு மிகாமலும், திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம/நகர்ப்புறமாயின் ரூ. 8,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (திட்டம் 1-ன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்). மேலும், திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 20,00,000/-மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 30,00,000/- கடன் வழங்கப்படுகிறது. 

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 4% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 10,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி