கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சதீஷ், கார்த்தி, குணா ஆகிய மூன்று குற்றவாளிகளை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். இவர்களில் சதீஷ், கார்த்தி சகோதரர்கள், குணா அவர்களது உறவினர். இவர்கள் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர். இந்த மூவரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.