அதன் பின்னர் அவர்கள் மீதான நம்பிக்கையில் கடந்த 2024 ஆம் வருட அக்டோபர் மாதம் வங்கிப் பரிவர்த்தனை மூலமாக ரூ இரண்டு கோடியே 26 லட்சம் செலுத்தியுள்ளார். இதேபோல அவரது உறவினரான ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமணன் என்பவர் ரூ 55 லட்சத்து 96 ஆயிரம் கொடுத்துள்ளார். இரண்டு பேரும் சேர்ந்து மொத்தமாக ரூ. 2 கோடியே 85 லட்சத்து 10 ஆயிரம் செலுத்தியுள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட சரவணன் உள்ளிட்டவர்கள் ஆறு மாதம் வரை வட்டியைக் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் எதுவும் தராமல் ஏமாற்றிவிட்டதனால் அரவிந்த் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விசாரணை நடத்தி சரவணன் உள்பட 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி