மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஆற்றுப்படுத்துநர் ஜாய் சாராள் குழந்தைகள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள குழுவின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
இளைஞர்நீதி குழுமம் மேனாள் உறுப்பினர் பேபி கலாவதி இளஞ்சிறார் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முன்னேற்றத்தில் விஏஓக்கள் பங்கு குறித்து எடுத்துரைத்தார். காரைக்குடி வழக்கறிஞர் பிரியா குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். வருவாய் அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.