சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான மறைந்த ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் சார்பில் மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, அனைத்து கட்சிகள் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.