சிறப்பு அழைப்பாளர்களாக தேவகோட்டை நகர் மன்றத் தலைவர் சுந்தரலிங்கம், நகர்மன்றத் துணைத் தலைவர் ரமேஷ், நகர் மன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோதைச்செல்வன் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இக்கல்லூரியில் தான் படிக்கும் போது பெரிய வசதிகள் ஏதுமின்றிப் படித்தேன். இருப்பினும் இக்கல்லூரி தந்த கல்வியால் ஒரு பள்ளியை நிர்வகிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறேன் எனப் பேசினார். விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு