சருகணி தேவாலயத்தின் இறைமக்கள், தங்களின் 'நேசத்தந்தை' என்று போற்றும் இறை ஊழியர் லெவே அவர்களின் உருவப்படத்தை, தாங்கிய சப்பரம் வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்சென்று, அவரது பரிந்துரை வழியாக, இறைஆசீரை மன்றாடினர். இறுதியாக, அனைத்து மதங்களையும் சார்ந்தோர் வழங்கிய காணிக்கைகளைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட உணவு, அனைவருக்கும் வழங்கப்பட்டது. பிறமத மக்களும் சமபந்தி விருந்தில் கலந்துகொண்டனர். தந்தை லெவே அவர்கள், ஏழைகளுக்கு உணவு வழங்கிய நற்பண்பை நினைவுகூரும் வகையில், கடந்த 52 ஆண்டுகளாக, அவரது மறைவின் நினைவு நாளில், அன்னதானம் எல்லோருக்கும் வழங்கப்படுகிறது. அருட்தந்தை லூயி மரிய லெவே 6 ஏப்ரல் 1884 அன்று பிரான்ஸ் நாட்டிலுள்ள ரென் மறைமாவட்டத்தில் உள்ள இலாலி என்ற ஊரில் பிறந்தவர்.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு