சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, சிங்கம்புணரி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்று (அக்.,2) போலீசார் சோதனை செய்ததில் 100 மதுபாட்டில், 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து ரவி, பாலகிருஷ்ணன், சந்திரன், பழனி குமார், ப்ரைட் அஸ்லாம் ஆகிய 5 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.