நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு - ஊழியர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் வருவாய்த் துறை ஊழியர்கள் நாளை (நவ.17) முதல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணிகளை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். உரிய அவகாசம் வழங்க கோரியும், பணி நெருக்கடியை கண்டித்தும் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் எழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. அரசு விடுமுறை தினங்களில் பணி செய்ய நிர்ப்பந்திக்க கூடாது எனவும், ஒரு மாத கால ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் எனவும் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி