இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பல காரணங்கள் உள்ளன. இதைப் போக்க, இரவு நேரத்தில் கற்றாழை ஜெல்லைக் கொண்டு 5 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். அத்துடன், வாழைப்பழம் அல்லது பப்பாளி சாற்றை முகத்தில் தடவலாம். மேலும், தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்துவது சிறந்தது. இவற்றைச் செய்து, மன அழுத்தத்தைக் குறைப்பதும் இளமைப் பொலிவுக்கு அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.