அரசு பள்ளியில் சேர்ந்தால் வெள்ளி நாணயம் பரிசு

கோவை மேட்டுப்பாளையம் அருகே வள்ளுவர் நகரவை தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புதுமையான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் முதலாம் வகுப்பில் முதலில் சேரும் 50 மாணவர்களுக்கு தலா 2 கிராம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெற்றோர்கள் இதற்கு நல்ல வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி