புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையொட்டி, பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். தற்போதைய கடுமையான வெப்பநிலையை கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
நன்றி:News18