விஞ்ஞானி ’நெல்லை’ முத்து காலமானார்

தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து, திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் தனது 74வது வயதில் காலமானார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றிய இவர் அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் 4 புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது கிடைத்துள்ளது. முத்து மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி