கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவி வீட்டுக்கு அருகில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் வசித்து வந்தார். இந்த மாணவன் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து, 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி ஆடையின்றி போட்டோக்களை அனுப்ப கூறியுள்ளனர். அதன் பேரில், அம்மாணவியும் போட்டோக்களை அனுப்பியுள்ளார். அதனை மாணவியுன் தந்தைக்கு அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டுள்ளனர். செல்போன் எண்ணைப் பார்த்த தந்தை, நேராக எதிர் வீட்டிற்குச் சென்று மாணவனை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தார்.