தமிழ்நாட்டில் மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கனிம வள ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக, மணல் கொள்ளையில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதாக கனிம வள ஆணையர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ‘மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை’ என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நன்றி: NewsTamilTV24x7