இந்நிலையில் இன்று ஏப்ரல் 3) காலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஏற்காடு மலையில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் ஏற்காடு மலைப் பாதையில் 7வது கொண்டை ஊசி வளைவிற்கு மேல் சாலையில் ஓரமாக இருந்த ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சாலையில் கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் போக்குவரத்து சீரானது.