தொடர்ந்து கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து நான்கு பேரை மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியை சந்திக்க அனுமதி அளித்தனர். இது குறித்து பூபதி கூறுகையில், மல்லிகை கரை அருகே சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பெரியாண்டிச்சி அம்மன் கோவில் எங்கள் சமூக மக்கள் வழிபாடு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டு எங்கள் சமூகத்தை கோவிலுக்கு வர விடாமலும் வழிபாடு செய்ய விடாமலும் தடுத்து வருகின்றனர். மேலும் வருகின்ற 16ஆம் தேதி கும்பாபிஷேக விழா முன்னறிவிப்பு இல்லாமல் ஏற்பாடு செய்துள்ளனர். கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது, எங்களை அனுமதித்த பிறகு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.