சேலம் அருகே சுக்கம்பட்டி ஓடையில் நேற்று இரவு அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார் என்பது குறித்து போலீசார் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.