இதையடுத்து ராஜ்குமாரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறும் போது, 'நேற்று பள்ளி வகுப்பறையில் இருந்த மாணவர் ராஜ்குமாரை ஆசிரியர் ஒருவர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ராஜ்குமார் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்' என்றார்கள். ஆசிரியர் திட்டியதாக கூறி பிளஸ்-2 மாணவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
MBBS, BDS பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு