சேலம் மாவட்டத்தில் 1285 பேர் தேர்வு எழுத வரவில்லை

சேலம் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு மொத்தம் 11 மையங்களில் நடைபெற்றது. இதில் சேலம் மாநகராட்சி பகுதியில் 4 மையங்களில் 2467 பேர் தேர்வு எழுதினர், 268 பேர் வரவில்லை. மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள 7 மையங்களில் 6906 பேர் தேர்வு எழுதினர், 1017 பேர் வரவில்லை. மொத்தம் சேலம் மாவட்டம் முழுவதும் 8,563 பேர் தேர்வு எழுதினர். சோலார் கல்லூரி மையத்தில் நடந்த தேர்வை மாநகர போலீஸ் கமிஷனர் அணில் குமார் கிரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து முடிந்தது.

தொடர்புடைய செய்தி