இதனையொட்டி சேலம் மாவட்டம் வீரபாண்டியில் உள்ள தீயணைப்பு பயிற்சி மையத்தில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சேலம் மண்டல துணை இயக்குனர் கல்யாணகுமார் தலைமை தாங்கி பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட அலுவலர் மகாலிங்கம் மூர்த்தி, உதவி மாவட்ட அலுவலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. இதில் ஆட்டையாம்பட்டி நிலைய அலுவலர் உதயகுமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.
அஜித் பிறந்தநாளையொட்டி 'பில்லா' திரைப்படம் ரீ-ரிலீஸ்