இதனால் வீட்டில் கலைவாணி மட்டும் தனியாக இருந்தார். அப்போது, அவரது வீட்டிற்கு மந்திரவாதி என்று கூறிக்கொண்டு ஒருவர் வந்தார். பின்னர் அவர் கலைவாணியிடம் குடும்பத்தில் கஷ்டங்கள் இருக்கிறது. அதை சரி செய்ய வீட்டில் மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என கூறியதை நம்பிய கலைவாணியும், பூஜைக்கு ஏற்பாடு செய்தார். அப்போது, ஒரு சொம்பில் நிறைய தண்ணீர் நிரப்பி அதற்குள் ஒரு எலுமிச்சம் பழத்தை போட்டு கற்பூரம் ஏற்றி அந்த நபர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு அவர் கலைவாணியிடம் உனது கழுத்தில் உள்ள தாலி சங்கிலியை கழற்றி சொம்புக்குள் போட்டால் உங்களுக்கு எந்தவித நோய் நொடியும் வராது என்று தெரிவித்துள்ளார். அதனை நம்பிய கலைவாணி கழுத்தில் இருந்த 3½ பவுன் தாலி சங்கிலியை கழற்றி போட்டுள்ளார்.
கை, கால்களை கழுவி வர கலைவாணி சென்றபோது சொம்புக்குள் இருந்த தாலி சங்கிலியை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார். இந்த மோசடி குறித்து கலைவாணி கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.