சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி கோம்பைகாடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 75). தனியார் நிறுவன காவலாளி. இவர் நேற்று காலை வேலை முடிந்து வீட்டிற்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பனமரத்துப்பட்டி ஏரி ரோடு பாலம் பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிள், சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த கணேசன் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.