இதனைத் தொடர்ந்து இரவு 8 மணியளவில் மாநகரின் பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, அம்மாப்பேட்டை, அழகாபுரம், கிச்சிப்பாளையம், செவ்வாய்பேட்டை, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும், திடீரென சூறாவளி காற்றும் வீசியதால் சாலையோரம் இருந்த சில மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.
இந்த கனமழையால் சாலையிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். சேலம் புதிய பஸ் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். வெளியூர்களில் இருந்து வந்த பஸ்களும் தண்ணீரில் தத்தளித்துச் சென்றதை காண முடிந்தது.