இடங்கணசாலை நகராட்சிக்கு ரூ. 2 கோடியில் கூடுதல் அலுவலக கட்டிடம்

சேலத்தில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில், இடங்கணசாலை நகராட்சிக்கு புதிதாக ரூ.2 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் அலுவலக கட்டிடத்தையும், காடையாம்பட்டி, ராசிகவுண்டனூரில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டிடத்தையும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில், நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் குத்து விளக்கேற்றினார். இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் தளபதி, ஆணையாளர் பவித்ரா, மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி