சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் இன்று பிற்பகலில் வருகை தந்து அவரை நேரில் சந்தித்து சிறிது நேரம் பேசினார். மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், வரும் காலம் நமதே என எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும், அரசியல் முக்கிய கருத்துக்கள் குறித்தும் பேசியதாக சதாசிவம் எம்எல்ஏ தெரிவித்தார்.