விஷ பூச்சி கடித்து லாரி பட்டறை உரிமையாளர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் சங்ககிரி சந்தைப்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 42). இவர் சங்ககிரியில் லாரி பாடிகட்டும் பட்டறை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர் லாரி பட்டறையில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரை விஷபூச்சி கடித்ததால் அவர் வலியால் துடித்தார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி ஆனந்தகுமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி