இதன் காரணமாக, ரூ. 3,500 முதல் ரூ. 4,000 வரை இருந்த ஒரு யூனிட் ஜல்லி ரூ. 5 ஆயிரமாகவும், எம். சாண்ட் யூனிட் ரூ. 5,500 முதல் ரூ. 6,000 வரையும், பி. சாண்ட் யூனிட் ரூ. 7 ஆயிரமாகவும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளாத நிலை ஏற்படும். மேலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்.
இதன் வேலைநிறுத்தம் காரணமாக, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குவாரிகள் இயங்காது. அரசுக்கு நாள் ஒன்றுக்கு 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். எனவே, உடனடியாக அரசு தலையிட்டு, பன்மடங்கு உயர்த்தப்பட்ட வரியை திரும்ப பெற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.