சேலம்: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பெரும்பாலை பகுதியைச் சேர்ந்த அம்சராஜ் (வயது 30). இவருக்கு திருமணமாகி சரண்யா (23) என்ற மனைவியும், தனுஷ் (2) என்ற மகனும் உள்ளனர். அம்சராஜ் திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோட்டில் தள்ளு வண்டியில் சிப்ஸ் கடை நடத்தி வந்தார். அம்சராஜ் தனது சொந்த ஊரான பெரும்பாலைக்கு வந்துவிட்டு மீண்டும் கொடை ரோட்டுக்கு புறப்பட்டார்.

 மோட்டார் சைக்கிளில் மனைவி, குழந்தையுடன் சங்ககிரி பழைய பஸ்நிலையம் பகுதியில் வந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த அம்சராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய மனைவி, மகன் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சங்ககிரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி