அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த தங்க சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 9 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். அதன் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி இருப்பதாக தெரிவித்தனர். கடந்த ஒரு மாதத்தில் 2 போலீஸ் அதிகாரிகள் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.