சேலம்: மனைவி பிரிந்து சென்றதால்.. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

சேலம் அன்னதானப்பட்டி புட்டா மிசின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் லோகநாதன் டிரைவர். இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் மனவேதனையில் இருந்த லோகநாதன் மது குடித்துவிட்டு சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தார். இதையடுத்து கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் சுமித்ரா கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார். இதனால் மனமுடைந்த லோகநாதன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரை எடுத்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி