இதனிடையே திடீரென அந்த பணம் எனக்கு வரவில்லை. இதுகுறித்து ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். அதைத்தொடர்ந்து என்னை தொடர்பு கொண்டு பேசிய அதிகாரிகள், உங்களது பெயர் இறந்தவர்களின் பட்டியலில் உள்ளதால் உரிமை தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்றனர். இதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தி மகளிர் உரிமை தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். பெண்ணின் இந்த பரபரப்பான புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.