சேலம் அம்மாபேட்டை சேர்ந்த கலைச்செல்வி, கடந்த ஆண்டு கணவர் சதீஷ்குமார் மஞ்சள் காமாலை நோயால் இறந்ததில் மனமுடைந்து காணப்பட்டார். கடந்த 7 ஆம் தேதி வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இவர், அதிக மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.