தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சேலம் வட்டம் சார்பில், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி மணக்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டத் தலைவர் சரவணன் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு போராட்டத்தை துவக்கி உரையாற்றினார். போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் கருப்பு ரிப்பன் அணிந்திருந்தனர்.