சேலம் அஸ்தம்பட்டி போலீசார் அணைமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படி நின்றிருந்த ஜாபர்அலி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். இதேபோல், அன்னதானப்பட்டி போலீசார் சஞ்சீவராயன்பேட்டை பகுதியில் ரோந்து சென்றபோது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கலைவாணி என்பவரையும் கைது செய்தனர்.